நாட்டின் 74-வது சுதந்திர தின விழா : டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் குடியரசுத்தலைவர் மரியாதை
Aug 15 2020 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவை யொட்டி குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். Bhadauria ஆகியோர் கலந்து கொண்டனர்.