விமான விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
Aug 15 2020 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் விமான விபத்து நடைபெற்ற, கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூடக்கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வந்தேபாரத் திட்டத்தில், துபாயில் இருந்து கேரளா சென்ற விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிரங்க முற்பட்ட போது, ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள, விமான விபத்து விசாரணை முகைமை என்ற 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட உத்தரவிடக்கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.