இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Aug 15 2020 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் அடுத்து வரும் 5 நாட்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட், உத்தரபிரதேச மாநிலங்களில் அடுத்த 5 நாட்களில், மிக கனமழை பெய்யும் என்றும், குஜராத்தில் 17 மற்றும் 18-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.