விவசாயிகள் மசோதாக்கள் தொடர்பாக பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன - எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பிரதமர் பதில்
Sep 18 2020 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் மசோதாக்கள் தொடர்பாக, பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோதி, அம்மாநிலத்திற்கான ரயில் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். விவசாயிகள் மசோதாக்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் திரு. நரேந்திர மோதி, மறுமலர்ச்சிக்கு எதிராக அரசியல் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். புதிய மசோதாக்கள் மூலம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையைப் பெறமுடியாமல் போகும் என்ற புகாரை மறுத்த திரு. மோதி, சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் குறை கூறினார்.