நாட்டின் பொருளாதார பேரழிவுக்கு பா.ஜ.க. அரசின் ஆணவமே காரணம் - 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம்
Sep 21 2020 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க. அரசின் ஆணவ நடவடிக்கைகளால் தான் நாட்டின் பொருளாதாரம் பேரழிவை சந்தித்துள்ளதாக திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து திரு. ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக இந்தியாவில் யாரையும் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்வதாக கூறியுள்ளார். முதலில் பேசவிடாமல் தடுத்தார்கள் - அடுத்து நாடாளுமன்றத்திலிருந்து எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள் - கறுப்பு வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை அறியாமல் அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது - அனைத்தும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பேரழிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.