சீனாவுக்கு உளவு பார்த்த விவகாரம் - கைதான பத்திரிகையாளருக்கு 7 நாள் போலீஸ் காவல்
Sep 21 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பகுதிநேர பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் பகுதி நேர பத்திரிகையாளராக இருந்த, ராஜீவ் சர்மா பாதுகாப்புத்துறையின் முக்கிய தகவல்களை சீனாவுக்கு வழங்கியதாக கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முக்கிய ரகசியங்களை அனுப்பியதற்காக, ராஜீவ் சர்மாவுக்கு ஷெல் நிறுவனம் மூலம் பெரும் தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் ராஜீவ் சர்மா கைது செய்யப்பட்டார். அதற்கு உடந்தையாக இருந்த சீன பெண் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ராஜீவ் சர்மாவின் கூட்டாளியும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொளீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சீனாவுக்கு வழங்கிய தகவல்கள் தொடர்பாக மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.