மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - பெங்களூருவில் விவசாயிகள் கண்டன ஊர்வலம்
Sep 21 2020 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், ஊர்வலமாகச் சென்றனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், கர்நாடக தலைநகர் பெங்களூருவில், 21 விவசாய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன. பின்னர் சுதந்திரப் பூங்கா வரை, சுமார் 4 கிலோமீட்டர் தூரம், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.