மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல், டி.ஆர்.எஸ். எம்.பி.க்கள் போராட்டம்
Sep 23 2020 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திரிணாமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், மகாத்மா காந்தி திருவுருவச் சிலை முன்பு, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தினர்.