நாடாளுமன்ற மாநிலங்களவைக்‍ கூட்டத்தொடர் 8 நாட்களுக்‍கு முன்பாகவே நிறைவு - மறுதேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு

Sep 23 2020 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற மாநிலங்களவை மழைக்‍காலக்‍ கூட்டத்தொடர் 8 நாட்களுக்‍கு முன்பாகவே இன்றுடன் நிறைவுபெற்று, அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மழைக்‍கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ள ‍கூட்டத்தொடரில் 25 மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 6 மசோதாக்‍கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும், மாநிலங்களவைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே புதிய வேளாண் மசோதாக்‍கள், குரல் வாக்‍கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, மாநிலங்களவை நடவடிக்‍கைகளை எதிர்க்‍கட்சிகள் புறக்‍கணித்தன. வரும் அக்‍டோபர் 1-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக முன்கூட்டியே இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் மாநிலங்களவை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00