அதிநவீன டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை - டி.ஆர்.டி.ஓ. குழுவினருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு
Sep 23 2020 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லேசர் வழி தொழில்நுட்பத்துடன் கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை மகாராஷ்ட்ர மாநிலத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில், மகாராஷ்ட்ர மாநிலம் Ahmednagar உள்ள மையத்தில், லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை திட்டமிட்டபடி 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எதிர்ப்பு ஏவுகணையை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை வெற்றிபெற்றுள்ளதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன குழுவினரின் செயல்பாடுகளால் தான் பெருமிதம் கொள்வதாகவும், இதன்மூலம் எதிர்காலத்தில் இறக்குமதித் தேவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திரு.ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.