உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விவகாரம் - மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்
Sep 23 2020 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்ச நீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து விசாரிக்க, மூத்த வழக்கறிஞர் திரு.பிரஷாந்த் பூஷணுக்கு, டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டதாக, மூத்த வழக்கறிஞர் திரு.பிரஷாந்த் பூஷண் மீது உச்சீநீதிமன்றம் தாமான முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தவறுக்கு மன்னிப்புக்கு கோரும்படி பலமுறை அறிவுறுத்தியும், அவர் மன்னிப்புக்கோரவில்லை. இதனால் அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்திய பூஷண், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், அக்டோபர் 23-ம் தேதி ஆஜராகும்படி, பிரஷாந்த் பூஷணுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், வழக்கறிஞராக தொடர்வதில் அவருக்கு ஏதேனும் சிக்கல் நீடிக்குமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.