ஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடரும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி வீடு முற்றுகை
Sep 23 2020 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு.ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோயில் வெள்ளித்தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்களில் மூன்று வெள்ளி சிம்மங்கள் மாயமாகின. அந்தவேதியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோயில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகக்கூறி, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத்தை பஜ்ரங்தள் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.