கொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்

Sep 24 2020 6:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த‌், பிரதமர் திரு. நரேந்திர மோதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெலகாவி தொகுதி எம்.பி.,யும், மத்திய ரயில்வே இணை அமைச்சருமான திரு. சுரேஷ் அங்காடி, கடந்த மாதம் 11-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரமாக உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சுரேஷ் அங்காடிக்கு, மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திர மோதி, கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா, மத்திய ரயில்வ அமைச்சர் திரு. பியுஷ் கோயல், பா.ஜ.க., தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00