இந்தியாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா - கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து நடவடிக்கை
Sep 24 2020 7:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுடனான விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைத்து சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் என இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளை குறிப்பிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கு வருவதற்கு முந்தைய 14 நாட்களில் இந்த நாடுகளில் பயணம் செய்தவர்களும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அரசின் அழைப்பின்படி வருபவர்களுக்கு தடை எதுவும் இல்லை.