குஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து - உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
Sep 24 2020 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் ஏற்பட்ட தீ, முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் ஆலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக ஆலையில் உள்ள 3 பாய்லர்கள் வெடித்து சிதறியதாகவும், அதன் சத்தம் பல கிலோமீட்டருக்கு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. தீ அணைப்பு வீரர்களின் கடும் போராட்டத்தால் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீ விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதற்கான காரணம் தெரியவரும் என்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.