கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவகல்யான் நாராயண ராவ் கொரோனாவுக்கு பலி - அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
Sep 25 2020 7:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயண ராவ் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 66. பிதர் தொகுதி எம்.எல்.ஏ.,வான பசவகல்யான் நாராயண ராவ், கொரோனா தொற்று காரணமாக கடந்த 1ம் தேதி பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலுறுப்புகள் செயலிழந்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி பசவகல்யான் நாராயண ராவ் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.