எல்லையில், பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது - சீனாவிடம், இந்தியா கண்டிப்பு
Sep 25 2020 9:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எல்லையில், பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என, சீனாவிடம், இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா - சீனா இடையே, ராணுவ கமாண்டர்கள் அளவில், ஆறாம் சுற்று பேச்சு அண்மையில் நடைபெறற்றது. இது குறித்து, வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியபோது, ராணுவ கமாண்டர்கள்அளவில் நடந்த ஆறாவது சுற்று பேச்சில், லடாக் எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றிதான், முக்கியமாகப் பேசப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது; எல்லையில் இப்போதுள்ள நிலையை மாற்றவும் முயற்சிக்கக் கூடாது' என சீனாவிடம் உறுதியாக தெரிவிக்கப்பட்டதாக அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையேயான 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து விரைவில் திட்டமிடப்படும் என அனுராக் ஸ்ரீவத்சவா குறிப்பிட்டுள்ளார்.