தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் - பீகார் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்பு
Sep 25 2020 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் இன்று பிற்பகல் இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில், பீகார் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதலமைச்சர் திரு. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், திரு. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தற்போதே வியூகம் அமைத்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில், பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.