நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் - நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகை தீபிகா படுகோனின் மேலாளரிடம் இன்று விசாரணை
Sep 25 2020 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது.
நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய புகார் தொடர்பான விசாரணைக்கு நடிகைகள், சாரா அலி கான், தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் மும்பையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவாவில் இருந்த நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் நேற்று மும்பை வந்து சேர்ந்தார். அதேபோல் நடிகை சாரா அலி கானும் மும்பை வந்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் தீபிகா படுகோனேவின் மேலாளரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் மும்பையில் இன்று விசாரணை நடத்துகின்றனர். நடிகைகள் தீபிகா, சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூரிடம் நாளை விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக்கின் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரரணை வரும் 29-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.