நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் - நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகை தீபிகா படுகோனின் மேலாளரிடம் இன்று விசாரணை

Sep 25 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய புகார் தொடர்பான விசாரணைக்‍கு நடிகைகள், சாரா அலி கான், தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் மும்பையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவாவில் இருந்த நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் நேற்று மும்பை வந்து சேர்ந்தார். அதேபோல் நடிகை சாரா அலி கானும் மும்பை வந்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் தீபிகா படுகோனேவின் மேலாளரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் மும்பையில் இன்று விசாரணை நடத்துகின்றனர். நடிகைகள் தீபிகா, சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூரிடம் நாளை விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக்கின் ஜாமீன் மனு மீதான வழக்‍கு விசாரரணை வரும் 29-ம் தேதிக்‍கு தள்ளி வைக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00