காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல்
Sep 25 2020 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் Anantnag மாவட்டத்தில், Sirhama பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.