கொரோனா காலத்தில் தவித்த பறவைகளுக்காக மக்காச்சோளம் பயிரை அறுவடை செய்யாமல் விட்ட விவசாயி - பசி தீர்க்க குவியும் ஆயிரக்கணக்கான பறவைகள்
Sep 26 2020 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலத்தில், தனது தோட்டத்தில் கிடைக்கும் சோளப்பயிர்களை, பறவைகளுக்கே வழங்கி சிறந்த மனிதாபிமானியாக விளங்கி வருகிறார்.
கர்நாடக மாநிலம், தாவணகேரே மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினரான திரு.ஷாமனூர் சந்திரசேகர் சங்கோல், தனது மூன்று ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் மற்றும் பழ விதைகளை நட்டு த்து பராமரித்து வருகிறார். கொரோனா காலத்தில் பறவைகள், விலங்குகள் உண்ண உணவின்றி சிரமப்படுவதை அறிந்து வாடிய திரு.சந்திரசேகர், மக்காச்சோளப் பயிர்களை மயில்கள், காகங்கள், கிளிகள், புறாக்களுக்கு வழங்கி வருகிறார். ஒரே இடத்தில் விதவிதமான பறவைகள் கூடி உண்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகிறார்.