பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களை திசைத்திருப்ப பா.ஜ.க. புதிய பிரச்னைகளை எழுப்பும் - சிவசேனா கருத்து
Sep 26 2020 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் சட்டசபை தேர்தலுக்காக அம்மாநில மக்களை திசைத்திருப்ப, பா.ஜ.க. புதிய பிரச்னைகளை அங்கு எழுப்பும் என சிவசேனா மூத்த தலைவர் திரு. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, நல்லாட்சி ஆகியவற்றை விளக்கி தேர்தலை சந்திக்க முடியாத பா.ஜ.க., மும்பையில் எழுப்பிய பிரச்னைகளை மூடிவிட்டு, பீகாரில் புதிய பிரச்னைகளை எழுப்பச் சென்றுவிடும் எனக் கூறியுள்ளார்.