மெஹ்பூபா முஃப்தியை தேசவிரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தல்
Oct 24 2020 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹ்பூபா முஃப்தியை தேசவிரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், அம்மாநில கொடியை ஏற்றாமல், தேசியக் கொடியை ஏற்றவிட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹ்பூபா முஃப்தி தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க., அவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.