கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வல ஒத்திகையில் பிளிறிய யானைகள் - குதிரைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு
Oct 24 2020 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவையொட்டி ஜம்பு சவாரி ஊர்வலத்தின் ஒத்திகை நடைபெற்றது. அப்போது, யானைகளின் பிளிறல் சத்தத்தை கண்டு அச்சமடைந்த குதிரைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா, கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு எளிய முறையில் நடைபெற்று வருகிறது. இதனால் விழாவின் இறுதிநாளன்று நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே நடத்தப்பட உள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலம் நாளை தொடங்க இருப்பதால், இதற்காக ஒத்திகை நடைபெற்றது. இதில் 5 யானைகளும், குதிரைகளும் கலந்துகொண்டன. 5 யானைகளும் அணிவகுத்து வந்த நிலையில்,
பேண்டு வாத்தியமும் இசைக்கப்பட்டது. அந்த சமயத்தில் யானைகள் பிளிறின. இந்த சத்தம் கேட்டு குதிரைகள் மிரண்டு ஓட்டம் பிடித்தன. இதில், குதிரைகளில் அமர்ந்திருந்த சில போலீசார் கீழே விழுந்தனர்.