நாடு முழுவதும் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Oct 27 2020 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், ஜூன் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டுத் தலங்கள், திரையரங்கம், கேளிக்கை விடுதிகள் போன்றவை செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. எனினும், கல்வி நிலையங்கள், புறநகர் ரயில் சேவை ஆகியவை எப்போது தொடங்கும் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதிவரை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் எனவும், மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்துக்குள்ளான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே செல்ல தனி அனுமதி, அதிகாரிகளின் ஒப்புதல், இ.பாஸ் ஆகியவை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.