பீகார் சட்டப்பேரவைக்கான 2ம் கட்ட தேர்தலில் பிரதமர் மோதி, ராகுல் காந்தி இடையே போட்டி பிரச்சாரம் - பாட்னா, தர்பங்காவில் நடைபெறும் பேரணிகளில் இருவரும் இன்று பங்கேற்பு

Oct 28 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் சட்டப்பேரவைக்கான 2ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் திரு. மோதி, திரு.ராகுல்காந்தி இருவரும் இன்று போட்டி பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி அரசு முடிவுக்கு வருவதால் அங்கு 3 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 2ம் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 3ம் தேதியன்று 94 இடங்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ.க. கூட்டணியினரும், காங்கிரஸ் கூட்டணி கட்சியினரும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரதமர் திரு.மோதி பாட்னா, தர்பங்கா, முசாபர்பூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதேபோல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திரு.ராகுல்காந்தியும் பீகாரில் இன்று ஆதரவு திரட்டுகிறார். வால்மீகி நகர், குஷேஷ்வர் ஆகிய இடங்களில் அவர் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00