பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு மத்தியில் ஏற்பட்ட வெடிகுண்டு பீதி - வாக்குப்பதிவு நடைபெறும் அவுரங்காபாத் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
Oct 28 2020 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் சட்டப்பேரவைக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அவுரங்காபாத் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று தேர்தல் நடைபெறும் அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடி குண்டுகளை கைப்பற்றிய சி.ஆர்.பி.எப். போலீசார், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.