கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள் - அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோதி வேண்டுகோள்
Oct 28 2020 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வாக்காளர்களையும் பிரதமர் திரு.நரேந்திர மோதி கேட்டுக்கொண்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதல்கட்டத் தேர்தலில், 71 தொகுதிகளில் போட்டியிடும் ஆயிரத்து 66 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படி, அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், பிரதமர் திரு. மோதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக வாக்காளர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.