பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய பீகாரை கட்டியெழுப்புங்கள் - வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி வேண்டுகோள்
Oct 28 2020 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி 71 தொகுதிகளுக்கு இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், முதலமைச்சர் திரு. நிதீஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசு, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறியுள்ள சோனியா காந்தி, பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.