இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோள் வரும் 6-ம் தேதி விண்ணில் பாய்கிறது - ஸ்ரீஹரிகோட்டாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம்
Oct 28 2020 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 6-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் பலரும் தொற்றுக்கு ஆளானதால், இந்த ஆண்டு இதுவரை இஸ்ரோ சார்பில் எந்த செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளாக Risat-2BR2 என்ற செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வரும் 6-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. பூமியின் கண்காணிப்புக்காக அனுப்பப்படவுள்ள இந்த செயற்கைக்கோளுடன், 10 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் வணிக ரீதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் PSLV-C49 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளன.