நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு சிவசேனா மூத்தத் தலைவர் வலியுறுத்தல்
Oct 28 2020 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள சிவசேனா, காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதை தடுக்க முயற்சித்தால் அது ராஜ துரோகத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. Sanjay Raut செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, சீனாவின் உதவியுடன் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் திருமதி மெகபூபா முப்தி, திரு. பரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்தால் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்க முயற்சித்தால் அது ராஜ துரோகத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிவசேனா முன்பே கூறியதுபோல, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு அத்தகைய முடிவுகள் எதையும் எடுத்தால், எங்கள் முடிவை அப்போது தெரிவிப்போம் என திரு. Sanjay Raut குறிப்பிட்டுள்ளார்.