மும்பையில் டிரோன், குட்டி விமானங்கள் பறக்க விட தடை விதித்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Oct 28 2020 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை தாக்குதல் நினைவு தினம் வர உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக 30 நாட்களுக்கு டிரோன், குட்டி விமானங்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் நினைவு தினம் வர உள்ள நிலையிலும், தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதையொட்டியும், மும்பையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். அதன்படி, போலீசார் நகரில் டிரோன், ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி விமானங்களை பறக்கவிட தடைவிதித்து உள்ளனர். டிரோன், குட்டி விமானங்கள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால் போலீசார் இந்த தடையை விதித்து உள்ளனர். இந்த தடை வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை 30 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.