சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோதி
Oct 31 2020 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் வைக்கட்ட திருவுருப் படத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குஜராத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. மோதி, சர்தார் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி, கெவாடியா நகரில் அமைந்துள்ள ஒற்றுமைக்கான பட்டேல் சிலையின் காலடியில் பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். பின்னர் பெண் கமாண்டோக்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் திரு. மோதி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.