தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தி பின்னர் பிரதமர் மோதி உரை
Oct 31 2020 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புல்வாமா தாக்குதலில் பாதுகாப்புப்படையினரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ததாக பிரதமர் திரு. மோதி குற்றம்சாட்டியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி குஜராத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. மோதி உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம், வடகிழக்கு மாநில பிரச்னைகள், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை என அனைத்து விஷயங்களிலும் நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலில் பாதுகாப்புப்படையினரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ததாக பிரதமர் திரு. மோதி குற்றம் சாட்டினார். நாட்டின் நலன் கருதி இதுபோன்ற செயல்களை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும் என்றும், பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்றும் பிரதமர் திரு. மோதி குறிப்பிட்டார்.