10 கோடியே 87 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்
Oct 31 2020 2:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இதுவரை 10 கோடியே 87 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா 2-ம் இடத்திலும், கர்நாடகா 3-ம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 10 கோடியே 87 லட்சத்து 96 ஆயிரத்து 64 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 976 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.