டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
Oct 31 2020 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிஜாமுதீன், சாராய் கலே கான், காஸிபூர் ஆகிய இடங்களில் காற்று மிகவும் மாசடைந்துள்ளதால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில் காற்று மிகவும் மாசடைந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், தெற்கு டெல்லியிலுள்ள கலிந்தி கஞ்ச், ஜசோலா ஆகிய இடங்களிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.