மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதாக்கள் அறிமுகம்
Oct 31 2020 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில அரசு, சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றியது. இதே போல், காங்கிரஸ் ஆளும் மாநில சட்டப்பேரவைகளில், வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று, ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூடியதும், அமைச்சர் திரு. சாந்தி தாரிவால், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்களை அறிமுகம் செய்தார். அதாவது, வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிரான திருத்த மசோதாக்களை அவர் அறிமுகம் செய்தார்.