டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு - விவசாயிகளுடன் அரசு பேச்சு நடத்த வலியுறுத்தல்
Dec 1 2020 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியாவிலிருந்து வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ள அவர், விவசாயிகளுடன் பேச்சு நடத்த இந்தியா முயற்சி எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த போராட்டத்தை தான் உன்னிப்பாக கவனிக்காவிட்டால் கடமை தவறியவன் ஆகிவிடுவேன் என்றும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.