புதுச்சேரியில் நிவர் புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்குக - துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட 5க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்
Dec 1 2020 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் நிவர் புயல் தாக்குதலின்போது மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என விசைப்படகு உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 26-ம் தேதி வீசிய நிவர் புயலில், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.