புதுச்சேரியில் 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு - முகக்கவசம் அணிந்து, இடைவெளியுடன் அமரவைக்கப்பட்ட மாணவர்கள்
Dec 1 2020 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக்கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
புதுச்சேரியில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முதல்கட்டமாக இரண்டு தனியார் கல்லூரிகளான பிம்ஸ், மகாத்மா காந்தி கல்லூரி ஆகியவை இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தனர். கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் கொடுக்கப்பட்டதுடன், வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர்.