2-ஜி வழக்கு மேல்முறையீடு - அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
Dec 1 2020 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2ஜி அலைக்கற்றை மோசடி வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த திரு.ஆ.ராசா, திருமதி.கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு, நீதிபதி பிரிஜேஸ் சேத்தி முன்னிலையில், கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் விசாரிக்கப்பட்டாலும், உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. அவர் நேற்றோடு ஓய்வு பெற்ற நிலையில், நீதிபதி கண்ணா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. டிசம்பர் மாதத்திலேயே விசாரணையை முடிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி ஜனவரியில் விசாரிக்கப்படும் என அறிவித்தார்.