புதுச்சேரி அருகே சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக்கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியல்
Dec 1 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அருகே கோர்க்காடு கிராமத்தில், சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக்கூறி, பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கோர்க்காடு கிராமத்தில் பல ஆண்டுகளாக, செம்மண் கலந்தபடி சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாகவும், இந்த குடிநீர் பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்கு, சருமப்பிரச்சினைகள் உள்ளிட்ட ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இப்போராட்டம் காரணமாக வில்லியனூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.