ராஜ்கோட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த வழக்கு : குஜராத் அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Dec 1 2020 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குஜராத் அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பலியாகினர். இது குறித்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷன், R.S Reddy மற்றும் M.R Shah ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த தீ விபத்து அதிர்ச்சி அளிப்பதாகவும், இது பல்வேறு அரசு மருத்துவமனைகளின் நிலையை பிரதிபலிப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இவ்வழக்‍கில், கொரோனா மருத்துவமனையின் 7வது மாடியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக மட்டும், குஜராத் அரசு அறிக்‍கை தாக்‍கல் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பிரமாணப் பத்திரத்தை நிராகரித்தனர். முறையான பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய அரசு தலைமை வழக்‍கறிஞர் துஷார் மேத்தாவுக்‍கு உத்தரவிட்டு, வழக்கை நாளை மறுதினத்திற்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00