பி.எம். கேர்ஸ் நிதியத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் எங்கே போனது? : மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி
Dec 1 2020 7:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
PM cares நிதியத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் எங்கே சென்றது? என, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி.மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வி.மம்தா பானர்ஜி, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை, பா.ஜ.க.வைத்தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்தார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு என்ன உதவி செய்தது? எனக் கேள்வி எழுப்பிய அவர், PM cares நிதியத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் எங்கே சென்றுவிட்டது? எனவும் கேள்வி எழுப்பினார். நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்க மத்திய புலனாய்வு அமைப்புகளை, பா.ஜ.க. அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.