விவசாயிகளின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வலியுறுத்தல்

Dec 2 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டு மக்‍களுக்‍கு உணவளிக்‍கும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து, விவசாயிகளுக்‍கான உரிமைகளை வழங்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைக்‍ கண்டித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை சுட்டிக்‍காட்டியுள்ளார். வயல்வெளியில் அரும்பாடுபட்டு உழைத்து, நாட்டு மக்‍களுக்‍கு உணவு வழங்கும் விவசாயிகள், 6 நாட்களாக சாலைகளில் நிற்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்‍கைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான், விவசாயிகளுக்‍கு, நாடு நன்றி செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து, மத்திய பாரதிய ஜனதா அரசு, தனது அதிகார ஆணவப் போக்‍கைக்‍ கைவிட்டு, விவசாயிகளுக்‍கான உரிமைகளை வழங்க உடனடியாக நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00