விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விவகாரம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
Dec 2 2020 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீக்கிய குரு குருநானக்கின் 551-வது ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது குறித்து கவலை தெரிவித்தார். அமைதியான அவர்களது போராட்டத்திற்கு கனடா ஆதரவளிக்கும் என்றும் கூறினார். பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் அவர் தவறாக கருத்து கூறியிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலைவர்கள் தலையிட வேண்டாம் என ஜஸ்டின் டிருடேவின் பெயரை குறிப்பிடாமல் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.