சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு
Dec 2 2020 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. நீதிபதிகள் நக்கீரன், சந்திரசேகரன், முரளிசங்கர், மஞ்சுளா ராமராஜூ, தமிழ்செல்வி, கண்ணம்மாள், சாந்திகுமார், ஆனந்தி சுப்ரமணியம், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.