வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உத்தரப்பிரதேச எல்லையில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் பஞ்சாப் விவசாயிகள் - டெல்லியை நோக்கி முன்னேறுவதை தடுக்க முடியாமல் திணறும் போலீஸ், துணை ராணுவம்
Dec 2 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள், உத்தரப்பிரதேச எல்லையில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க முடியாமல் காவல்துறையும், போலீஸ், துணை ராணுவமும் திணறி வருகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் விதமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 7-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் அங்கு முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை களைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உத்தரப்பிரதேச எல்லையான Delhi-Ghazipur பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். அங்கேயே சமைத்து, சாலைகளில் அமர்ந்தபடி உணவு உண்டு வரும் விவசாயிகள், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பபெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால், டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க முடியாமல் காவல்துறையும், போலீஸ், துணை ராணுவமும் திணறி வருகிறது.