நாடு முழுவதும் 14.24 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : ஒரே நாளில் 10.96 லட்சம் பேருக்கு சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்
Dec 2 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 14 கோடியே 24 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 96 ஆயிரத்து 651 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 2-ம் இடத்திலும், ஆந்திரா 3-ம் இடத்திலும், தமிழகம் 4-ம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 14 கோடியே 24 லட்சத்து 45 ஆயிரத்து 949 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சத்து 96 ஆயிரத்து 651 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.