போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி - உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

Dec 2 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் திரு. நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் தங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு, நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் திரு.கோயல் ஆகியோர், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். டெல்லியில் உள்ள திரு.அமித் ஷா இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், விவசாயிகளின் போராட்டம் அதிகரித்து வருவது குறித்தும், விவசாய சட்டங்கள் மீதான விவசாயிகளின் கோரிக்கை குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கையாளும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00